100-வது மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி குறிப்பிட்ட அரசியல் வழிகாட்டி யார்? https://ift.tt/QMD8ojr
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடியின் 100-வது மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியில் நேற்று பேசும்போது தனது அரசியல் வழிகாட்டி லஷ்மண் ராவ் இனாம்தார் என்று கூறினார். இதைத் தொடர்ந்து பிரதமர் குறிப்பிட்ட லஷ்மண் ராவ் இனாம்தார் யார் என்பது குறித்து இணையதளத்தில் பலரும் தேட தொடங்கி உள்ளனர். கடந்த 1917-ம் ஆண்டு மகாராஷ்டிராவின் புணே அருகேயுள்ள காவ்தவ் கிராமத்தில் லஷ்மண் ராவ் இனாம்தார் பிறந்தார். பூர்ணா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற அவர் கடந்த 1943-ம் ஆண்டில் ஆர்எஸ்எஸ் அமைப்பில் இணைந்தார். ஆங்கிலேயர்களுக்கு எதிராக சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். ஹைதராபாத் நிஜாம் அரசுக்கு எதிரான போராட்டங்களை முன்னின்று நடத்தினார். from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம்